மட்டக்களப்பு கேணிநகர் மதீனா வித்தியாலய புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு!

Date:

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான கேணிநகர் மதீனா வித்தியாலயத்தில் ஐ.எஸ்.ஆர்.சீ. சிறிலங்கா அமைப்பினால் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.மீரா முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ் உமர் மௌலானா, ஐ.எஸ்.ஆர்.சீ. சிறிலங்கா அமைப்பின் திட்ட இணைப்பாளர் ஏ.எல்.ஜூனைட் நளீமி, பிரதிக் கல்விப் பணிப்பாளரும், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜூன் நிஸா, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.யூ.எம்.இஸ்மாயில், எம்.ஏ.ஜாபீர் கரீம், ஆசிரிய ஆலோசகர்களான ஏ.எல்.சலாம், எம்.பீ.எம்.சித்தீக் மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவரும் சமுகசேவையாளருமான எம்.ஏ.சீ.எம்.நியாஸ், பள்ளிவாயல் நிர்வாகத்தினர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஐ.எஸ்.ஆர்.சீ. சிறிலங்கா அமைப்பின் நிதியுதவியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த கட்டடத்தில் ஆசிரியர்களுக்கான பல்தேவை தொகுதி, கலாச்சார மண்டபம், மாணவர்களுக்கான வகுப்பறை தொகுதி ஆகியவை அமைவுள்ளன என்று பாடசாலையின் அதிபர் ஏ.மீரா முகைதீன் தெரிவித்தார்.
பாடசாலைக்கு அவசியத் தேவையாக காணப்பட்ட இவ் கட்டடத் தொகுதி அமைய முயற்சிகளை மேற்கொண்ட ஏ.எல்.ஜுனைத் நளீமி மற்றும் கட்டடம் அமைப்பதற்கு அனுமதி வழங்கிய கல்வி அதிகாரிகளுக்கும் பாடசாலை அதிபர் நன்றிகளை தெரிவித்தார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...

ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தேசிய ஷூரா சபை சந்திப்பு

ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய...