பிள்ளையான், வியாழேந்திரன், முஷாரப் அமைச்சர்களாக பதவியேற்பு!

Date:

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இன்று ஜனாதிபதி மாளிகையில் இந்தப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

அதற்கமைய அவர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.

அதேநேரம், எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தின் பக்கம் சென்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான முஷாரப் எம்.பியும் இராஜாங்க அமைச்சராக நியமனம்பெற்றுள்ளார்.

அவர் நெசவுத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
மேலும் வியாழேந்திரன், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுளார்.

ஏற்கனவே நேற்றையதினம் 22 பேருக்கு இராஜாங்க அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...