புதிய இடைக்கால அரசாங்கம்: ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த ஐக்கிய மக்கள் சக்தி!

Date:

தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான ஐக்கிள மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ‘பொதுமக்களின் வேண்டுகோள் கோட்டா வீட்டிற்கு செல்ல வேண்டும், நாங்கள் அந்த போக்கை ஆதரிப்போம் மற்றும் ராஜபக்ஷக்களின் கீழ் எந்த பதவியையும் ஏற்க மாட்டோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ அரசின் பதவிக்காலத்தின் கடைசி சில நாட்கள் இது என்று கூறிய அவர், மீண்டும் ஆட்சியைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்த வகையிலும் உதவாது என்றார்.

‘பொதுமக்கள் கோட்டாவை வீட்டிற்கு செல்லுமாறும், ராஜபக்ஷக்களை வீட்டிற்கு செல்லுமாறும் அழைப்பு விடுக்கின்றனர். பொதுமக்களின் அழைப்புக்கு நாங்கள் துணை நிற்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ அல்லது ராஜபக்ஷக்களுடன் இருந்தவர்களுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு விருப்பமோ தேவையோ இல்லை என ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துடனும் பொதுமக்களின் அங்கீகாரத்துடனும் மட்டுமே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

‘அது ஜனாதிபதித் தேர்தலாகவோ, நாடாளுமன்றத் தேர்தலாகவோ அல்லது உள்ளூராட்சித் தேர்தலாகவோ இருக்கலாம். பொதுமக்களின் ஆசியுடன் மட்டுமே ஆட்சி அமைப்போம், எனவும் குறிப்பிட்டுள்ளார்..

இதேவேளை கோட்டபாய ராஜபக்ஷ இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்த அவர், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Popular

More like this
Related

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோருக்கான அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில்...