புத்தாண்டிலும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில்!

Date:

புத்தாண்டு தினத்திலும் நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் பதிவாகியுள்ளன.

தேசிய புத்தாண்டு இன்று காலை 8.41 மணிக்கு உதயமாகிய போதிலும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தனர்.

இன்று அதிகாலை 4 மணி முதல் கொம்பனிதெருவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருந்தனர், ஆனால் புத்தாண்டு பிறக்கும் வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர்கள் எரிபொருள் நிரப்ப மறுத்துள்ளனர்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் போதியளவு பெற்றோல் இருப்பு வைத்திருப்பதாக உறுதியளித்த போதிலும், வரிசைகள் காணப்படுகின்றன.

இதற்கிடையில், 37,500 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 37,500 மெட்ரிக் தொன் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு மேலும் இரண்டு கப்பல்கள் இன்று நாட்டிற்கு வரும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது.

கப்பல்கள் வந்தவுடன் எரிபொருள் விநியோகம் விரைவில் தொடங்கும் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...