மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

Date:

ரம்புக்கனை வன்முறை தொடர்பில் பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறுதியளித்துள்ளார்.

அதேநேரம், வன்முறைகளில் இருந்து விலகியிருக்குமாறு அனைத்து பொதுமக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும், ரம்புக்கன சம்பவம் குறித்து பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை பொலிஸார் மேற்கொள்ளும் என்றும், அதனால் தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் கூறியுள்ளார்.

‘அனைத்து பிரஜைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது வன்முறையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன், என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...