மருத்துவ விநியோகப் பிரிவில் 50வீத மருந்துகள் முடிந்துவிட்டது: இதய நோயாளிகளுக்கான தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் இல்லை!

Date:

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவில் மருத்துவப் பொருட்களில் சுமார் 50வீத இருப்புக்கள் தீர்ந்துவிட்டதாக அரசாங்க மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது, நேற்று ஆங்கில ஊடகமொன்றும் கருத்து தெரிவித்த மருந்தாளுநர் சங்கத்தின தலைவர் அஜித் திலகரத்ன தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவில் இருக்க வேண்டிய 1,358 மருந்துகளில் 525 மருந்துகளின் கையிருப்பு தீர்ந்துவிட்டதாக தெரிவித்தார்.

அவற்றில் ஆறு உயிர் காக்கும் மருந்துகள், 239 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 280 அரிதாக பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளன.

‘குறிப்பாக, இதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் கையிருப்பில் இல்லை. அவற்றில் பெரும்பாலானவை இந்திய கடன் வசதியின் கீழ் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளன, ஆனால் அதற்கு இன்னும் ஆறு வார கால அவகாசம் தேவைப்படும், என்றார்.

மேலும் மருத்துவ விநியோகப் பிரிவில் இருக்க வேண்டிய 8,553 சத்திர சிகிச்சைப் பொருட்களில் மொத்தத் தேவையில் 62.9 சதவீதமான 5,376 இருப்புக்கள் தீர்ந்துவிட்டதாகவும் திலகரத்ன கூறினார்.

மேற்கூறிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைப் பொருட்கள் மருத்துவமனைகளில் மிகக் குறைந்த அளவிலேயே கிடைக்கக் கூடும் என்று குறிப்பிட்ட அவர், மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவப் பொருட்கள் இல்லாததால் மருத்துவமனை அமைப்பின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார்.

‘இந்த நிலைமை உருவாக்கப்பட்டு வருவதாக நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரிவித்தோம், ஆனால் அதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தலையீடு எதுவும் இல்லை. மருந்தாளுனர்களாகிய நாங்கள் இன்னும் இந்த நிலைமையை முடிந்தவரை நிர்வகிக்க முயற்சிக்கிறோம், ‘என்று அவர் மேலும் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள அரசுத் துறை சுகாதார நிறுவனங்களுக்கு அனைத்து மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், ஆய்வகப் பொருட்கள், கதிரியக்கப் பொருட்கள், அச்சிடப்பட்ட பொருட்கள் போன்றவற்றை வழங்குவதற்குப் பொறுப்பான முக்கிய அமைப்பாக உள்ளது.

சுகாதார நிறுவனங்களிடையே விநியோகிக்கப்படுகிறது. மேலும், திறந்த சந்தையில் தனியார் துறைக்கு கிடைக்காத ஆபத்தான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பொறுப்பாகும்.

இதேவேளை, நாட்டில் நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான பற்றாக்குறையை அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்து சுகாதார சேவைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

அன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரிகள்ஸ சங்கத்தின் பொதுச் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ, நாட்டில் நிலவும் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு குறித்து கலந்துரையாடுவதற்கு பல தடவைகள் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் அவகாசம் கோரியிருந்த போதிலும், ஆனால் தாம் அவகாசம் வழங்கப்படவில்லை.

நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள போதிலும் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்களுக்கும், வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கும் அரசாங்கம் சரியான தகவல்களை வழங்கவில்லை எனவும் டாக்டர் பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...