‘மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை’: பாராளுமன்றில் சன்ன ஜயசுமண

Date:

எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இதுவரை மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அடுத்த மூன்று மாதங்களில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும், சில மருந்துகளின் கையிருப்புகளைப் பெறுவதற்கு சுமார் 90 நாட்கள் ஆகும் என்றும், மருந்துப் பற்றாக்குறையின் தாக்கத்தைக் குறைக்க அமைச்சு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக இந்தத் தாமதம், ஏற்பட்டுள்ளது.
‘உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி ஆகியவை அத்தியாவசிய மருந்துகளை வாங்குவதற்கு எங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன.

உலக சுகாதார அமைப்பு (WHO) அடுத்த இரண்டு வாரங்களில் எங்களுக்கு அவசரகால மருந்துகளை வழங்கும். நாங்கள் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியையும் நாடியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிர் காக்கும் பதினான்கு மருந்துகளில் ஒன்றிற்கும், 646 அத்தியாவசிய மருந்துகளில் 37க்கும், அத்தியாவசியமற்ற 486 மருந்துகளில் 48இற்கும் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் கூறினார்.

.

Popular

More like this
Related

நிதி மோசடி குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது!

அதிகாரப்பூர்வ மென்பொருள் நிறுவலுடன் தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு...

மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113...

நாட்டின் பல மாவட்டங்களுக்கு II ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தற்போது நிலவும் கடும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு...

சுங்கத் திணைக்களம் 1 டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை எட்டியது!

2026 ஆம் ஆண்டிற்கான ஒரு டிரில்லியன் ரூபாய் வருமான இலக்கை நேற்று முன்தினம் எட்டியுள்ளதாக...