மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: பொலிஸ் ஊடகப்பிரிவு

Date:

நுகேகொடை- மிரிஹான பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற் இந்த மோதலின் போது ஒரு பொலிஸ் பஸ், 1 பொலிஸ் ஜீப், 2 மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன மற்றும் ஒரு தண்ணீர் பீரங்கி ட்ரக் சேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது 17 பொதுமக்கள், 17 பாதுகாப்பு படையினர் மற்றும் 3 ஊடகவியலாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளனர்.

போராட்டத்தின் போது காயமடைந்த பொலிஸ், விசேட பொலிஸ் பிரிவு மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...