‘அரசியலமைப்பை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது’: கட்சித் தலைவர்கள் கூட்டம் 28ஆம் திகதி!

Date:

அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாகவும், அரசியலமைப்புக்கு புறம்பாகவோ அல்லது அரசியலமைப்பை மீறியோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்னெடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் விடுத்த எழுத்துமூலக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அந்தவகையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...