‘எரிவாயு விநியோகச் சங்கிலியில் சிக்கல் உள்ளது’ : லிட்ரோ எரிவாயு நிறுவனம்

Date:

உள்நாட்டு பற்றாக்குறையால் எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25 ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எரிவாயு சரக்கு கப்பல்கள் இன்னும் கரைக்கு வந்தடையாததால், விநியோக வலையமைப்பை சீராக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நிறுவனம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘எங்களுக்கு எரிவாயு விநியோகத்தில் சிக்கல் உள்ளது. இருப்பினும், நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு பற்றாக்குறை ஓரிரு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும்’ என்று அவர் கூறினார்.

முன்னதாக, ஏப்ரல் 12 முதல் வணிக நோக்கங்களுக்காக லிட்ரோ எரிவாயு விநியோகம் ரத்து செய்யப்பட்டது.

மேலும், ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் எரிவாயு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் உடனடியாக அதன் பிறகு, நிறுவனம் விநியோகத்தை மீண்டும் தொடங்கும் நிலையில் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...