பிரதமரைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

“பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் மற்றும் அமைச்சரவையில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர்”.

அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் சபைத் தலைவருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் நீடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நீதியமைச்சர் அலி சப்ரி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தமது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாவை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் 10 கோடி ரூபாவுக்கும் அதிக சொத்துக்கள் சேதம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய கைதிகள் ஏற்படுத்திய மோதல் காரணமாக, நீர்கொழும்பு...

காசா குழந்தைகளின் கல்விக்காக ஸ்வீடன் பில்லியனர் ரோஜர் அகெலியஸ் சுமார் $76 மில்லியன் நிதியுதவி.

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதி குழந்தைகளின் கல்வித் தேவைகளை மறுசீரமைப்பதற்காக,...

டெங்கு பரவலால் கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் Online-இல்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் டெங்கு பரவல் காரணமாக, அனைத்து கல்வி நடவடிக்கைகளையும்...