‘போராட்டக்காரர்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்’ :பிரதமர்

Date:

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் தனது டுவிட்டர் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து தாம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு எப்போதும் மிகுந்த மரியாதையுடன் சேவையாற்றும் இலங்கை பொலிஸாரால் கடுமையான, பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தான் நம்புவதாக மகிந்த தெரிவித்துள்ளார்.

மேலும், ‘போராட்டக்காரர்கள் தங்கள் குடியுரிமையில் சம மரியாதை மற்றும் மரியாதையுடன் ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,’ என்று அவர் மேலும் கூறினார்

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...