முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு நோன்பு திறக்க தேவையான உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

Date:

கொழும்பு சிறைச்சாலையின் வேண்டுகோளின் பிரகாரம் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையினால் இரண்டாவது வருடமாகவும் சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

விசேடமாக 30 நாளும் நோன்பு நோற்பதற்காகவும் மற்றும் நோன்பு திறக்கும் இப்தார் விசேட நிகழ்வுகளுக்காகவும் அதற்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த குறித்த உணவுத் தொகையினை அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி, கொழும்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் டி. ரஜீவ எஸ். சில்வாவிடம் உத்தியோகபூர்மாக கையளித்தார்.

இதன் போது பெப்ரல் அமைப்பின் உப தலைவரும் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் முன்னாள் தலைவர் கே. என். டீன் மற்றும் சிறைச்சாலையின் சமூக நலன்புரி அதிகாரி மகேஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

30 நாட்களும் சஹர் வேளையில் நோன்பு பிடிப்பதற்கான உணவுப் பொருட்களுடன் 30 நாட்களும் நோன்பு திறப்பதற்கான கஞ்சி,பெருநாள் உணவு உட்பட சமைப்பதற்கு தேவையான ஏனைய சகல உணவுப் பொருட்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...