அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டாம்: பிரதமர் வேண்டுகோள்

Date:

அத்தியாவசிய அரச உத்தியோகத்தர்களை தவிர வேறு எவரும் பணிக்கு வரவேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் அனைவரும் தேவையில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தீரும் வரை இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமற்ற பொதுத்துறை ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலைமையை நிர்வகிக்க இந்த நடவடிக்கை உதவும் என அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...