அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது: இராணுவத் தளபதி

Date:

நாட்டில் நிலவும் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சிங்கள ஊடகமொன்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை அமைதியை நிலைநாட்ட முப்படைகளின் படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 234 பேரில் 86 பேர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் மூவர் தொடர்ந்தும் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார். கலவரம் காரணமாக 9 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் இராணுவ கவச வாகனங்களுடன் இராணுவத்தினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக வன்முறை சம்பங்கள் பதிவாகியிருந்ததுடன் இந்த நிலையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாளைய தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே தற்போது கொழும்பின் பல பகுதிகளில் இவ்வாறு இராணுவ வாகனங்கள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...