ஊரடங்குச் சட்டம்: பேருந்துகள் இல்லாமல் மக்கள் அவதி!

Date:

கொழும்பு கோட்டை பஸ் நிலையத்தில் இன்று (13) பேருந்துகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குட்பட்டனர்.

நேற்றிரவு முதல் சில பயணிகள் பஸ் நிலையத்தில் காத்திருந்து, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் மழையில் காத்திருந்தனர்.

எனினும், இன்று காலை 9.00 மணியளவில் மற்ற பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளை அதிகாரிகள் வெளியூர்களுக்கு திருப்பி அனுப்பினர்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.

அதேநேரம், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, பொதுசாலை, வீதிகள், ரயில் பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது பிற பொது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட காலப்பகுதியில் பொது போக்குவரத்து இன்னும் செயலில் உள்ளது.
இன்று பிற்பகல் 2 மணி வரை குறுகிய தூர சேவைகள் வழமையாக இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தேவை ஏற்பட்டால் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்று இயங்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் பிரச்சினை காரணமாகவும், ஊரடங்குச் சட்டம் காரணமாக ஊழியர்கள் வெளியேறியதாலும் சிறியளவிலான பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...