எரிபொருள் கோரி நாடளாவிய ரீதியில் போராட்டம்:கொழும்பில் பல வீதிகளில் போக்குவரத்து தடை

Date:

எரிபொருள் வழங்கக் கோரி நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதற்கமைய இந்த போராட்டம் காரணமாக கோட்டே – தலவத்துகொட வீதி பூங்கா சந்தியில் தடைப்பட்டுள்ளது.

கொழும்பு – ஹொரணை பிரதான வீதி பொகுன்னதர பகுதிக்கு அருகில் தடைப்பட்டுள்ளதுடன் காலி வீதி தெஹிவளை பாலத்திற்கு அருகில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு – கண்டி வீதி கன்னொருவ சந்தியில் முற்றாக தடைப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் காரணமாக மாளிகாவத்தை முதல் பஞ்சிகாவத்தை வரை தடைப்பட்டுள்ளது.

அத்தோடு எரிபொருள் கோரிய குழுக்களால் கொழும்பு-கண்டி வீதி கன்னோருவ சந்தியில் பேராதனை முற்றாக தடைப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருளை கோரி குழுவினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மாளிகாவத்தையில் இருந்து பஞ்சிகாவத்தை வரையான வீதியும் தடைப்பட்டுள்ளது.

பெற்றோல் விநியோகிக்கப்படாது என்பதால் இன்றும் நாளையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் இன்றும் மக்கள் பெற்றோல் நிலையங்களுக்கு வந்து பெற்றோலை பெற்றுக்கொள்கின்றனர்.

இன்றும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் பெற்றோல் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. .

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...