காலிமுகத்திடலில் 9ஆம் திகதி நடந்தது என்ன: தேசபந்து தென்னகோன் வாக்குமூலம்!

Date:

காலிமுகத்திடலுக்கு கடந்த 9ஆம் திகதி கலகக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அவர் வழங்கிய வாக்குமூலத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்ததாகவும், காலி முகத்திடல் மைதானத்திற்கு இரண்டு நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி, இறுதி நேரத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தனக்கும் பல மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் கூறப்பட்டதாக அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கலவரக்காரர்கள் பொலிஸ் அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு காலி முகத்திடல் மைதானத்திற்குள் பிரவேசித்ததாகவும் நிலைமையை ஜனாதிபதிக்கு அறிவித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருவர் அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றியிருந்தால் இந்நிலைமையை தடுத்திருக்க முடியும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...