எதிர்வரும் 3 நாட்களுக்கு பெற்றோல் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் : எரிசக்தி அமைச்சர்

Date:

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய கடன் வசதியின் கீழ் மூன்று எரிபொருள் தாங்கிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் 19 ஆம் திகதி கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளது. அதற்கமைய 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலுடன் கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்தடைந்தது.

எனினும் அதற்கு தேவையான டொலரை செலுத்துவதில் தாமதம் சிக்கல் நிலைமை காரணமாக அந்தப் பெற்றோலை இறக்குவதில் சிக்கல் நிலைமை காரணமாக பெற்றோலை தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் எதிர்வரும் நாட்களுக்குள் நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...