குச்சவெளி பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று மீட்பு!

Date:

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குச்சவெளி அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று (25) குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…

அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தின் மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது புதைக்கப்பட்ட நிலையில் குறித்த கைக்குண்டினை கண்டதாகவும் குறித்த சிறுவர்கள் கைக்குண்டு என்று தெரியாமல் அதனை எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் பின்னர் பிரதேச வாசிகள் குச்சவெளி பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த கைக்குண்டு மீட்பதற்கான ஏற்பாடுகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த கைக்குண்டினை செயலிழக்க செய்வதற்காக விசேட அதிரடிப் படையினருக்கு தகவல்கள் வழங்கியதை அடுத்து அவர்கள் அங்கு வந்ததாகவும், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...