குச்சவெளி பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று மீட்பு!

Date:

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் புதைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குச்சவெளி அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று (25) குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…

அந்நூரிய்யா பாடசாலை வளாகத்தின் மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது புதைக்கப்பட்ட நிலையில் குறித்த கைக்குண்டினை கண்டதாகவும் குறித்த சிறுவர்கள் கைக்குண்டு என்று தெரியாமல் அதனை எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் பின்னர் பிரதேச வாசிகள் குச்சவெளி பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த கைக்குண்டு மீட்பதற்கான ஏற்பாடுகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த கைக்குண்டினை செயலிழக்க செய்வதற்காக விசேட அதிரடிப் படையினருக்கு தகவல்கள் வழங்கியதை அடுத்து அவர்கள் அங்கு வந்ததாகவும், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...