சமையல் எரிவாயு விநியோகத்தை சீரமைக்க இன்னும் 45 நாட்களாகும்: லிட்ரோ நிறுவனம்

Date:

நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க இன்னும் ஒன்றரை மாதம் செல்லும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு 30,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிட நிறுவனம் ஆலோசித்து வருவதாகவும் நறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை சீரற்ற வானிலை காரணமாக சரக்கு கப்பலில் இருந்து எரிவாயுவை இன்னும் இறக்க முடியவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் ஓமானில் இருந்து இன்று மற்றுமொரு எரிவாயு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், எரிவாயு விநியோகம் தாமதமாகும் என்பதால், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு நிறுவனம் அறிவுறுத்துகிறது.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...