நியாயமற்ற முறையில் சம்பளம் குறைக்கப்பட்டால், மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும்!

Date:

சுகாதார ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மே 25ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பு இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தமது மத்திய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

‘சுகாதார அமைச்சில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மே 25 ஆம் திகதிக்குப் பிறகு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஊதியக் குறைப்பு ஏதேனும் செய்யப்பட்டால், தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது,என்று அவர் கூறினார்.

தேசிய சுகாதார சேவைகளை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...