சமையல் எரிவாயு விநியோகத்தை சீரமைக்க இன்னும் 45 நாட்களாகும்: லிட்ரோ நிறுவனம்

Date:

நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க இன்னும் ஒன்றரை மாதம் செல்லும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு 30,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை வெளியிட நிறுவனம் ஆலோசித்து வருவதாகவும் நறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை சீரற்ற வானிலை காரணமாக சரக்கு கப்பலில் இருந்து எரிவாயுவை இன்னும் இறக்க முடியவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் ஓமானில் இருந்து இன்று மற்றுமொரு எரிவாயு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், எரிவாயு விநியோகம் தாமதமாகும் என்பதால், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு நிறுவனம் அறிவுறுத்துகிறது.

Popular

More like this
Related

பாடநூல்கள் காணாமல்போன சம்பவம்: திணைக்கள விசாரணைக்குழு நியமனம்!

பாடநூல்கள் சில காணாமல்போன சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகத் திணைக்கள விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக்...

கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது: இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

பிரபல பாதாள உலக தலைவர் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இன்னும்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென...

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...