தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிப்பு!

Date:

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தூரபிரதேச போக்குவரத்தினை இன்றும் நாளையும் மாத்திரமே முன்னெடுக்க முடியும் எனவும் அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது குறுகிய தூர போக்குவரத்து சேவைக்காக தனியார் பஸ்கள் மட்டுப்படுத்தப்படும், தூர பிரதேசங்களுக்கான போக்குவரத்து சேவை இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்படும்’.

தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்கான எரிபொருள் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளது.

எதிர்வரும் நாட்களில் தனியார் பஸ் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையலாம்.
எரிபொருள் விநியோகத்தில் தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்கு முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையினையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

எதிர்வரும் மாதம் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என குறிப்பிடப்படுகிறது. தனியார் பஸ் போக்குவரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தால் அதன் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்க வேண்டும்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...