‘தேவையான மருந்துகளை கொள்வனவு செய்ய பல நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது’:ருவான்

Date:

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கு பல நாடுகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டுக்கான மிக மோசமான காலம் இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வாக்குறுதியளித்த பணம் கிடைத்தவுடன் நாட்டுக்கு மருந்து விநியோகத்தை மீண்டும் தொடங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக, இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்ததாகவும், இந்தியாவிடமிருந்து சாதகமான கருத்துக்களைப் பெற்றதாகவும் கூறினார்.

சில மருந்துகளை கொழும்புக்கு வெளியில் உள்ள வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...