நியாயமற்ற முறையில் சம்பளம் குறைக்கப்பட்டால், மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும்!

Date:

சுகாதார ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மே 25ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பு இன்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தமது மத்திய குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

‘சுகாதார அமைச்சில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளால், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மே 25 ஆம் திகதிக்குப் பிறகு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஊதியக் குறைப்பு ஏதேனும் செய்யப்பட்டால், தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது,என்று அவர் கூறினார்.

தேசிய சுகாதார சேவைகளை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...