பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி: பொலிஸாரால் கண்ணீர்ப் புகை வீச்சு

Date:

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதிக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

“கோட்டா – ரணில் சதி அரசாங்கத்தை அகற்றுவோம்!” என்ற தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் கண்டன ஊர்வலத்தை ஆரம்பித்தனர்.

வீட்டிற்குச் செல்லுங்கள் கோட்டா” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுமாறும், நாட்டில் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பாகக் கருதப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், மக்கள் வாழ்வதற்கு நிவாரணம் வழங்குமாறும், காலிமுகத்திடல் தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக கொழும்பில் இளைஞர் எதிர்ப்பாளர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் இலங்கை முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல...

கண்டியில் கோலாகலமாக நடைபெற்ற ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ வரலாற்று நூலின் அறிமுக விழா!

இலங்கையின் பெருமைமிக்க வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் 'அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய...

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...