பாதுகாப்பு காரணங்களுக்காக மகிந்த திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்!

Date:

ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரிமாளிகையை சுற்றி வளைத்த வன்முறையை அடுத்து, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமிற்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று (11) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

‘நாட்டின் நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், முன்னாள் பிரதமர் அவர் விரும்பும் இடத்திற்கு மாற்றப்படுவார்’ என்று பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறினார்.

திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள ‘Pillow House’ எனப்படும் பங்களாவில் தங்கியிருப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுருந்தது.

மேலதிக பாதுகாப்பிற்காக முன்னாள் கடற்படை தள பணியாளர்கள் Pillow House மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நேவி ஹவுஸ் அமைந்துள்ள இடம் கடலுக்கும், கடற்படை தளத்தின் நுழைவாயிலுக்கும் அருகில் உள்ளது, அதே நேரத்தில் ‘Pillow House’ மாளிகை காட்டில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி பல இரகசிய இடங்கள் உள்ளன.

Pillow House மாளிகை பாதுகாப்பான இடம் என்பதால், மஹிந்த உள்ளிட்ட குழுவினர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...