‘போதிய உரங்கள் இல்லாவிடின் ரூ.3,400க்கு அரிசியை இறக்குமதி செய்து விற்க வேண்டும்: அகில

Date:

நாட்டில் 10,000 உரங்கள் வழங்காவிட்டால் அரிசியை வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து ரூ.3,400க்கு விற்க வேண்டியிருக்கும் என உரம் மற்றும் பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இலங்கைக்கு வழங்க இந்தியா இணங்கியுள்ளது.

அதில் 40,000 மெட்ரிக் தொன் நெல் சாகுபடிக்கும் 20,000 மெட்ரிக் தொன் மற்ற பயிர்களுக்கும் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக நெல், மரக்கறிகள், பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பயிர் விதைகளுக்கான தேவை போதுமானதாக இல்லை என கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.

விவசாயத் துறையில் விதைத் தட்டுப்பாடு ஒரு முக்கியப் பிரச்சினையாக இருப்பதால், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விவசாய அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...