‘மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயார்’: மகிந்த

Date:

மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் விசேட அறிவிப்பின் பின்னர் மகிந்த பதவி விலகுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. பதவி விலகக் கூடாது என கோரி அலரிமாளிகைக்கு அருகில் பொதுமக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அலரி மாளிகைக்கு முன்பாக மக்கள் முன்னிலையில உரையாற்றிய பிரதமர் மஹிந்த,

‘மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயார், எனவும் தான் எப்போதும் மக்களின் நலனுக்காகவே செயற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகக் கூடாது என கோரி ஏராளமான மக்கள் அலரிமாளிகையை நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மக்கள் முன் உரையாற்றிய பிரதமர், மக்களுக்காக எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ள தயார் எனவும், பொது மக்களுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தயார் எனவும் சற்று முன் அறிவித்துள்ளார்.

பிரதமர் இன்று விசேட அறிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும், இன்று தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...