‘மக்கள் போராட்டத்தை நசுக்குவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்’: ஜே.வி.பி

Date:

மக்கள் போராட்டங்களை நசுக்குவது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறி அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறுமாறு ஜே.வி.பி கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமைப்புகள் அவசரகாலச் சட்டத்தை கண்டித்துள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மக்களின் குரலை நசுக்கி, பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி ஆட்சியில் நீடிக்க முயற்சிப்பதை விட, மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவல், மக்களின் எதிர்ப்பை திசை திருப்பும் மற்றொரு சூழ்ச்சி.

‘ஒட்டுமொத்த நாடும் ஜனாதிபதியை பதவி விலகச் சொல்கிறது. எனவே, முதலில், பிரதமரை இராஜினாமா செய்யச் சொல்வதற்கு பதிலாக, ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும்.

பின்னர், முழு அமைச்சரவையுடன் பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும், என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...