‘வன்முறையைத் தூண்டியதற்காக இதுவரை ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை’: அனுரகுமார

Date:

மே (09) வன்முறையைத் தூண்டியதற்காக இதுவரை ஜே.வி.பி.யின் ஒரு உறுப்பினர் கூட கைது செய்யப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை (18) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஒரேயொரு ஜே.வி.பியின் தலையீடு குறித்த வழக்கை முன்வைக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்தார்.

அநுரகுமாரவுக்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ,

பொலிஸ் மா அதிபரிடம் வினவியதன் பின்னர், வன்முறையைத் தூண்டியதற்காக 150 ஜே.வி.பி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தமக்கு வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார எம்.பி அருந்திகவின் உறுப்புரிமையை குறுக்கு சோதனை செய்வதற்காக அவர்களின் பெயரை வெளியிடுமாறு எம்.பி.யிடம் கேட்டதால் பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

‘ஜே.வி.பி.யின் உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், ஐ.ஜி பியால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்’ என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை வன்முறையை தூண்டும் வகையில் செயற்படும் பட்சத்தில் தம்முடைய உறுப்பினர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...