விஜயதாச ராஜபக்ஷ,6 மாத சம்பளத்தை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வழங்க நடவடிக்கை!

Date:

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ எதிர்வரும் ஆறு மாத சம்பளத்தை (அனைத்து கொடுப்பனவுகள் உட்பட) கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.

இந்த மாதம் முதல் வரும் அக்டோபர் மாதம் வரை தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.

கொழும்பு ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான ஆறு மாத சம்பளத்தை வரவு வைக்குமாறு கோரி விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாடு எதிர்நோக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நன்கொடை குறித்து விஜயதாச ராஜபக்ஷ லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி.விஜேசூரியவுக்கும் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...