வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற 67 இலங்கையர்கள் கது!

Date:

திருகோணமலை கடற்கரையூடாக வெளிநாடொன்றிற்கு தப்பிச் செல்ல முயற்சித்த 67 இலங்கையர்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாம்பல் தீவு பகுதியில் கடற்படை மற்றும் நிலாவெலி பொலிஸார் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2 முச்சக்கரவண்டிகள், கெப் வாகனம் மற்றும் வேன் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 45 ஆண்களும், 7 பெண்களும், 3 குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆட்கடத்தல் காரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் கடற்படையினர், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...