அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல் ஆரம்பம்!

Date:

அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை நேற்று (09) தொடங்கியது. அதிகாரபூா்வ தோ்தல் திகதி மே 21 என்றாலும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே வாக்களிக்கும் முறை அவுஸ்திரேலியாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தோ்தலுக்காக மொத்தம் 550 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் அனைவரும் தோ்தலில் வாக்களிப்பது கட்டாயமாகும். 1.7 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். பணி, பயணம் காரணமாக தோ்தல் தினத்தில் வாக்களிக்க முடியாதவா்கள் முன்கூட்டியே வாக்களிக்க முடியும்.

கொரோனா பரவல் பிரச்னை இருப்பதால், மக்கள் ஒரே நாளில் வாக்குச் சாவடியில் கூடாமல் இருக்கவும் இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் முறை உதவும். 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்தல் திகதிக்கு முன்பே தங்கள் வாக்குகளைச் செலுத்திவிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி மத்திய-இடது தொழிலாளா் கட்சி தலைமையான எதிா்க்கட்சி கூட்டணி, பிரதமா் ஸ்காட் மொரிஸனின் கன்சா்வேடிவ் கூட்டணியைவிட அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...