ஆறு வாரங்களில் நிதி அமைச்சரின் இடைக்கால வரவு-செலவுத் திட்டம்!

Date:

தமது அரசாங்கம் ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இடைக்கால வரவு- செலவுத் திட்டம் நிவாரண வரவு செலவுத் திட்டமாக முன்வைக்கப்படும் எனவும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் பணம் இரண்டு வருட நிவாரணத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

தோல்வியடைந்த பொருளாதார முகாமைத்துவத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்த்து நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

22 மில்லியன் இலங்கை சனத்தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நிதி வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...