இன்று முதல் பாராளுமன்றத்திற்கு விசேட பாதுகாப்பு: உளவுத்துறை கண்காணிப்பை விரிவுபடுத்தவும் நடவடிக்கை

Date:

நாட்டில் இடம்பெற்ற பல வன்முறைச்சம்பவங்களையடுத்து பாராளுமன்ற வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை இரட்டிப்பாக்க பாதுகாப்புத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ தலைமையில் இன்று (16) காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போதே பாராளுமன்றத்தில் பாதுகாப்பை அதிகரிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, பாராளுமன்றத்தை சூழவுள்ள தியவன்னா ஓயா பகுதியில் கடற்படையினரின் ரோந்து பணிகளும், பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் ரோந்து பணிகளும் அதிகரிக்கப்படவுள்ளன.

மேலும், உளவுத்துறை கண்காணிப்பை விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளது.

பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படைகளின் அதிகாரிகளையும் நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, பாராளுமன்றத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாயகம் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன நேற்று (15) பாராளுமன்ற வளாகத்திற்கு விஜயம் செய்தார்.

இதன் பாதுகாப்பு தொடர்பாக அவர் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. இந்த வாரத்தில் நான்கு நாட்கள் பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதுடன், ஒவ்வொரு நாளும் இந்த பாதுகாப்பு ஏற்பாட்டை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

பாதுகாப்பு சோதனைகளும் நாளை (17) முதல் நீடிக்கப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...