இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவத் தளபதி ஓய்வு பெற்றதையடுத்து, புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.
இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே புதிய இராணுவத் தளபதியாக ஜூன் 01 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.