இலங்கையைச் சேர்ந்த ஆஷாத் ஸிராஸ் மலேசிய பல்கலைக்கழகத்தில் உயர்ந்த பதவிக்கு தெரிவு!

Date:

இலங்கையை மலாய் சமூகத்தைச் சேர்ந்த ஆஸாத் ஸிராஸ் மலேசிய சர்வதேச இஸ்லாமிய பலக்லைக்கழகத்தில் PHD பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதே பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் கற்கைகள் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் மத ஒப்பிட்டு ஆய்வுகள் தொடர்பான துறையில் கலாநிதி பட்டப்படிப்புக்காக கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்.

மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இப்பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய பீடமான இஸ்லாமிய கற்கைகள் மற்றும் மானுடவியல் பீடத்தின் பதினொரு துறைகள் மற்றும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர்.

இப்பீடத்தின்
2022 – 2023 காலப் பகுதிக்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர், சமய ஆய்வுகள் மற்றும்‌ சமாதான சகவாழ்வு, மற்றும் மதங்களுக்கு இடையேயான புரிதல், குறிப்பாக பௌத்த-முஸ்லிம் புரிதலுக்கான மத ஆய்வுகள் துறையில் தீவிர ஈடுபாடு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றவராவார்.

அதேவேளை பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சமயப் புரிதலை ஏற்படுத்த இஸ்லாம் மற்றும் பௌத்தத்தின் ஒப்பீட்டு ஆய்விலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நாகரிகங்களுக்கு இடையிலான கலந்துரையாடல்: இஸ்லாமும் பௌத்தமும் என்ற புத்தகம் இவரால் வெளியிடப்பட்டது.
பஹன மீடியா பிரைவேட் லிமிடெட் இதனை பிரசுரம் செய்துள்ளமை விசேட அம்சமாகும்.
ஆசாத் சிராஸ் அவர்களுக்கு NewsNowவின் வாழ்த்துக்கள்!

Popular

More like this
Related

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...

வெளிநாட்டினருக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்த சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை

தற்போதைக்கு வெளிநாட்டவர்களுக்கு முச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கப்போவதில்லை...

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...