இலங்கை மூத்த அறிவிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்!

Date:

இலங்கை வானொலி- வர்த்தக ஒலிபரப்பின் முதல் பெண் அறிவிப்பாளர்களுள் ஒருவரான, புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம், நேற்று யாழப்பாணத்தில் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதல் நிலை பெண் அறிவிப்பாளர்களில் ஒருவராக புவனலோஜினி விளங்கி வந்தார்.

புவனலோஜி பிரபல அறிவிப்பாளர் நடராஜசிவத்தின் மனைவியாவார் இவர் கடந்த ஆண்டு ஜனவரியில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த மூத்த அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட் அவரை இழந்து துயருறும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். சகோதரி புவனலோஜினியின் ஆன்மா நற்பேறு அடையப் பிரார்த்தனைகள் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசியா கண்டத்திலேயே முதலாவது வானொலி ஒலிபரப்பு நிலையம் இலங்கை கொழும்புவில் ‘கொழும்பு வானொலி’ என்ற பெயரில் நிறுவப்பட்டு 1925, டிசம்பர் 25-ல் ஒலிபரப்பு தொடங்கியது.

அப்போது இலங்கை ஆங்கிலேயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததால் ஆங்கிலத்திலேயே ஒலிபரப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இடையிடையே தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின.

Popular

More like this
Related

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...

ஈரான் ஜனாதிபதி பலி: உலகம் பாதுகாப்பானதாக மாறும்; அமெரிக்க அதிகாரியின் சர்ச்சைக் கருத்து!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த...

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம்...