உண்டியல் முறையில் டொலர்களை மாற்ற முயன்ற இருவர் கைது!

Date:

உண்டியல் முறையின் ஊடாக அமெரிக்க டொலரை மாற்ற முற்பட்ட இருவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களும் சட்டவிரோதமாக 47,000 அமெரிக்க டொலர்களை மாற்ற முயன்றதாக அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பரிமாற்று முறைமைகளை தவிர்த்து சட்டவிரோதமான முறைகளில் வெளிநாட்டு பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் மத்திய வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் டொலர்களை உண்டியல் முறையின் கீழ் மாற்ற முயன்ற போது கிடைக்கப்பட்ட இரகசிய தகவல் அடிப்படையில் பொலிஸ்hர் இன்று கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 40 மற்றும் 52 வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...