அண்மைய வன்முறைகள் தொடர்பில் 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Date:

அலரிமாளிகை, காலி முகத்திடல் மற்றும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 230 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொலைகள், தாக்குதல்கள், பலத்த காயங்கள், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தீ வைப்புக்கள் தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் உள்ளனர் என்றும் சம்பவம் தொடர்பில் 702 நபர்களிடம் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 702 வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் தொடர்பில் சேகரிக்கப்பட்ட காணொளி ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது பொதுமக்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு 1997 மற்றும் 118 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் வழங்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

53 ஆவது வருடத்தை பூர்த்தி செய்யும் இஸ்லாமிய கலாபீடம் ஜாமியா நளீமியா!

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு கணசமான பங்களிப்பை வழங்கும் ஒரு நிறுவனமாக...

பலாந்தை முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசும் “பலன்புர முஸ்லிம்கள்” நூல் வெளியீடு செப்டம்பரில்

களுத்துறை மாவட்டம், அகலவத்தை தேர்தல் தொகுதிக்குட்பட்ட வரலாற்று  சிறப்புமிக்க பலாந்தை பிரதேச...

செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சாரதிகளும் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது ஏற்கனவே...

இஸ்ரேலிய அமைச்சர் இடாமர் பென் க்வீர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்: அமெரிக்க செனட்டர் ஜாக்கி ரோசன் வலியுறுத்தல்

காசாவில் தினமும் இரவு பல பாலஸ்தீனர்களை இஸ்ரேலியப் படைகள் கொல்ல வேண்டும்...