ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தைத் திருத்தும் நோக்கில் இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்நிலையில், குறித்த சட்டமூலம் இனி நாடாளுமன்றத்தின் சட்டமூல பரிசீலனைக்கான நடைமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, சட்டமூலம் தொடர்பான மேலதிக பரிசீலனைகள் மற்றும் விவாதங்கள் எதிர்வரும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இடம்பெறும்.
