இலங்கையில் டெங்கு மரணங்கள் 69 ஆக அதிகரிப்பு

Date:

இந்த வருடத்தில் இதுவரை இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை நாட்டில் மொத்தமாக 92,854 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் 52.95 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட ரீதியில் டெங்கு நோயின் அதிக தாக்கம் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 19,778 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 18,433 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,695 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின்...

இலங்கை பொலிஸாருக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய சீருடை!

இலங்கை காவல்துறை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய சீருடையை அறிமுகப்படுத்தவுள்ளதாக பொதுப்...

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு...

பல பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...