எதிர்வரும் 3 நாட்களுக்கு பெற்றோல் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் : எரிசக்தி அமைச்சர்

Date:

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய கடன் வசதியின் கீழ் மூன்று எரிபொருள் தாங்கிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை 40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் 19 ஆம் திகதி கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளது. அதற்கமைய 37,000 மெட்ரிக் தொன் பெற்றோலுடன் கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்தடைந்தது.

எனினும் அதற்கு தேவையான டொலரை செலுத்துவதில் தாமதம் சிக்கல் நிலைமை காரணமாக அந்தப் பெற்றோலை இறக்குவதில் சிக்கல் நிலைமை காரணமாக பெற்றோலை தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் எதிர்வரும் நாட்களுக்குள் நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...