எரிபொருள் நெருக்கடியால் பாடசாலை செயற்பாடுகள் பாதிப்படையலாம்: ஆசிரியர் சங்கம்

Date:

பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று நாளை ஆரம்பிக்கப்படும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எரிபொருள் நெருக்கடி காரணமாக சுமூகமான செயற்பாடுகள் பாதிக்கப்படலாம். எனவே இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

‘மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தேர்வு நிலையங்களில் கடமையாற்ற வேண்டிய தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிரமம் ஏற்படும் என்பதால், அடுத்த நான்கு நாட்களுக்குள் பிரச்னைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...