ஏறாவூர் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்கள் கைது!

Date:

நாட்டில் ஏற்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் வன்முறையுடன் இடம்பெற்ற பொருட்கள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் .

கிழக்குமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கட்டளையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலின் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி .பண்டார தலைமையிலான மூன்று பொலிஸ் குழுவினர் இணைந்து மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட வன்முறை மற்றும் பொருட்கள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட வன்முறையின் போது பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் பொருட்கள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள பதிவுகள் மூலம் பொதுமக்கள் தகவல்களை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவுக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...