சப்புகஸ்கந்த பணிகள் இன்று முதல் மீள ஆரம்பம்!

Date:

இரண்டு மாதங்களுக்கு பின்னர், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகளை இன்று முதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து இன்றைய தினம் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.

இதையடுத்து, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

39,968 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோல் தற்போது கையிருப்பில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் 7,112 மெட்ரிக் தொன் 95 ஒக்டேன் பெற்றோலும், 23,022 மெட்ரிக் தொன் டீசலும் , சூப்பர் டீசல் 2,588 மெட்ரிக் தொன்னும் மற்றும் விமான எரிபொருள் 3,578 மெட்ரிக் தொன்னும் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...