டீசல் தட்டுப்பாடு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்: எரிசக்தி அமைச்சர்

Date:

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின் உற்பத்திக்காக அதிகளவான டீசல் வெளியிடப்படுவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், டீசல் தட்டுப்பாடு இன்னும் சில நாட்களுக்கு தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையம் பழுதடைந்ததையடுத்து, மூன்று மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படுவதற்கு அதிகளவு டீசல் மின்சார உற்பத்திக்காக வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வழக்கமாக தினசரி 4,000 மெட்ரிக் தொன் டீசல் பெற்றோல்; நிரப்பு நிலையங்களுக்கு விநியோகப்படும் என்றும், போதுமான அளவு இருப்புக்கள் இருந்தும் தற்போது 1000 முதல் 1500 மெட்ரிக் தொன்கள் மட்டுமே வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், தற்போது 3,000 மெட்ரிக் தொன் பெற்றோல் எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெற்றோலுக்கான நீண்ட வரிசைகள் அடுத்த மூன்று நாட்களுக்குள் குறையும் என்று கூறிய அமைச்சர்,
எரிபொருள் தாங்கிகளின் சமீபத்திய வேலைநிறுத்தம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகக் கோளாறுகள் காரணமாக தற்போது பெற்றோலுக்காக வரிசை காணப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...