டீசல் தட்டுப்பாடு காரணமாக 50 சதவீத தனியார் பேருந்துகள் இன்றும் இயங்குகின்றன!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று 50 வீதமான தனியார் பஸ்களை இயக்க முடியும் என தனியார் பஸ் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், சில தூர பிரதேசங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பெற்றோல் நிலையங்களில் டீசல் விநியோகம் செய்வதில் பஸ்களுக்கு முன்னுரிமை வழங்கினால் பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் காரணமாக நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய ரயில்கள் வழமை போன்று இயங்கும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று முதல் வழமை போன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீP டி சில்வா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...